Sunday, March 20, 2011

விரதங்களும் அவற்றின் விளக்கங்களும்,பலன்களும்


விரதமென்பது ஒன்றையே எண்ணி நம் சிந்தனையை சிதற விடாமல் அதில் மனம் நிலைத்திருக்கச் செய்வதாகும். வரிப்பது என்பது விரதம். உணவு உண் ணாமல் இருத்தலும், மிதமாக உண்டலும் தீயன நீக்கி நல்லன உண்ணும உணவு நியமமே “விரதம்” என்று அழைக்கப் படுகிறது.


இது விரதத்தின் முதற்படி மட்டு மே இதுவே விரதமாகாது. அலையும் மனத்தை அடக்கி ஒரு மனதாக நிறுத்தி இறைவன் திரு வடியில் நிலைத்திருத்தலே சிறப்பாகும். மனம் போகும் வழியில் செல்லாது தடுத்தல், புலனொடுக்கம் இவை வாழ்க்கையின் செம்மைக்குத் தேவையானது.


மனதை அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்”. இன்று உடல்நலம் பேணும் மருத்துவர்கள் கூட வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று கூறுகின்றார்கள்.


உடலின் மூலமாகத்தான் உத்தமனைத் தேடவேண்டும் என்று நுல்கள் கூறுகின்றன. உடலின் முக்கியத்துவத்தைத் திருமூலர்:
“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே”.
என்று கூறுவார்.

-எனவே விரதம் என்பது நம் உடலையும்,மனதையும் தூய்மைப டுத்துவதற்காக மட்டுமே ஆகும்.

No comments:

Post a Comment